உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்திப்பு

Published On 2023-05-15 09:36 GMT   |   Update On 2023-05-15 09:36 GMT
  • 973-75ம் ஆண்டு பயிற்சி பெற்றவர்கள்
  • வாருங்கள், சந்திப்போம் என்ற பெயரில் நிகழ்ச்சி

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காட்டில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 1973-75ம்ஆண்டு பயிற்சி பெற்றவர்கள் வாருங்கள், சந்திப்போம் என்ற பெயரில் நிகழ்ச்சி சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் (ஓய்வு) குணசேகரன் தலைமை தாங்கினார்.

காமக்கூர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பெரணமல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) வையாபுரி வரவேற்று பேசினார்.

இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, தற்போது பணியிலிருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தற்பொழுது குடும்ப நிலவரம் உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து பலரும் நினைவுகளை பேசினர்.

முடிவில் படவேடு பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு நன்றி கூறினார்.

Tags:    

Similar News