உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயி

Published On 2022-07-21 14:19 IST   |   Update On 2022-07-21 14:19:00 IST
  • போக்சோ சட்டத்தில் கைது
  • ேபாலீசார் விசாரணை

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அழுது கொண்டே தனது தாயாரிடம் கூறி உள்ளார்.

சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு நடத்தி விவசாயியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News