உள்ளூர் செய்திகள்

தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் 

தெருக்களில் நாய்கள் தொல்லை

Published On 2022-07-07 10:37 GMT   |   Update On 2022-07-07 10:37 GMT
  • குழந்தைகளை கடிப்பதாக குற்றச்சாட்டு
  • பொதுமக்கள் அச்சம்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்களும் மற்றும் குழந்தைகளும் செல்லும்போது தெருநாய்கள் கடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வந்தவாசி காந்தி சாலை பஜார் சாலை சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News