உள்ளூர் செய்திகள்

கல்பட்டு கிராமத்தில் வாழைத்தோட்டங்கள் தேசதமடைந்த காட்சி.

கல்பட்டு கிராமத்தில் வாழைத்தோட்டங்கள் சேதம்

Published On 2022-12-12 10:22 GMT   |   Update On 2022-12-12 10:22 GMT
  • மாண்டஸ் புயலால் சாய்ந்தது
  • நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு இருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தது. தோட்டம் காற்றில் சாய்ந்து விட்டது.

இது குறித்து விவசாயிகள் புகாரின் பேரில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் நித்யானந்தம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சேதமடைந்த வாழைத்தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த வாழைத்தோட்டங்களை மதிப்பீடு செய்து அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும், உரிய முறையில் மனு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

Tags:    

Similar News