உள்ளூர் செய்திகள்

விபத்தில் நொறுங்கிய கல்லூரி பஸ்.

ஆரணி அருகே கல்லூரி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதல்: 30 மாணவர்கள் படுகாயம்

Published On 2022-06-05 15:47 IST   |   Update On 2022-06-05 15:47:00 IST
  • நின்றிருந்த பஸ் மீது மோதியது.
  • தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

ஆரணி:

ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கே ஆரணி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆரணி சென்னை சாலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து ஆரணி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்த பஸ் மீது திடீரென மோதியது.

இதில் 19 மாணவிகளும், 11 மாணவர்களும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்த சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ மாணவர்களுக்கு ஆறுதல் கூறி டாக்டரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். லேசான காயமடைந்த மாணவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News