- தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி செல்வி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சாமுவேல் (வயது 19) என்ற மகம், ஒரு மகளும் உள்ளனர். சாமுவேல் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் முதலாம் ஆண்டின் அனைத்து பாட தேர்வுகளும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-ம் ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயத்தில் இருந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.