உள்ளூர் செய்திகள் (District)

கலசப்பாக்கம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2023-04-19 08:52 GMT   |   Update On 2023-04-19 08:52 GMT
  • காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் கூலி தொழிலாளி இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (வயது 17).

திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி அதே பகுதியை வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி புவனேஸ்வரி வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இதற்கு வாலிபர் மறுத்துள்ளார். நான் டைம் பாஸ்க்குதான் காதலித்து வந்ததாகவும் மேலும் நீ வேண்டுமானால் செத்துப் போ என மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டார்.

தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசில் இறந்த புவனேஸ்வரின் தந்தை பெருமாள் தன் மகள் சாவுக்கு காரணமான வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News