அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
- நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
- உணவுகளை தயார் செய்வது குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை
வாலாஜா:
வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்து வமனையில் மாவட்ட கலெக் டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, மருந்தகங்கள், இயற்கை வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களை பார்வையிட்டார். மேலும் அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து மருத் துவமனையில் வழங்கப்படும் உணவு,சமையல் அறையை பார்வையிட்ட கலெக்டர் அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் உணவு தயார் செய்வதற்கான பொருட்க ளின் தரங்கள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறை யில் உணவுகளை தயார் செய்வது குறித்து சமையல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவைப்ப டுகின்ற தேவைகள் குறித்து கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.