உள்ளூர் செய்திகள்

மினி ஆட்டோ மீது பைக் மோதி சினிமா லைட் மேன் பலி

Published On 2023-04-27 07:56 GMT   |   Update On 2023-04-27 07:56 GMT
  • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்தார்
  • திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்

ஆரணி:

ஆரணி அடுத்த குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் சென்னையில் சினிமாவில் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு சரண்யா என்ற மனைவியும் சரண்ராஜ் என்ற மகனும் உள்ளனர். திருவிழாவிற்காக தனது கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆரணிக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விண்ண மங்கலம் கூட்ரோடு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி ஆட்டோ சாலையில் வலது பக்கமாக திரும்பியது.

பின்னால் தயாநிதி ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மினி ஆட்டோ மீது மோதியது. இதில் அவர் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் தயாநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News