உள்ளூர் செய்திகள்

வந்தவாசி பகுதியில் குடிநீர் தண்ணீர் தொட்டி திறப்பு

Published On 2022-12-03 14:20 IST   |   Update On 2022-12-03 14:20:00 IST
  • ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வந்தவாசி:

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டுக்கு உட்பட்ட நெமந்தகார தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தலா 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.

இந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரதிகாந்தி வரதன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் து.வரதன் வரவேற்றார்.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டி.கே.சரவணன் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளிலிருந்து பொது மக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அம்பிகா மேகநாதன், ரிஹானா சையத்அப்துல்கறீம், ச.நூர்முகமது, தீபா செந்தில்கு மார், பா.சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News