உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் பலி

Published On 2022-07-19 15:09 IST   |   Update On 2022-07-19 15:09:00 IST
  • உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்
  • போலீசார் விசாரணை

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள செம்மாம்பாடி, கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ணு (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மண்ணு, இறந்து விட்டார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News