உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

ஆரணி வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-06-05 10:15 GMT   |   Update On 2022-06-05 10:15 GMT
  • 97-ம் ஆண்டு பிரமோற்சவ திருவிழா
  • நாளை மறுதினம் தேரோட்டம் நடக்கிறது.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகின்றன.

இந்த கேவிலில் 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளன.

வரதராஜ பெருமாள் தேர் திருவிழா வருகின்றன 7.06.22 அன்று நடைபெறுவதால் தேரின் தன்மை குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் வருவாய் துறை நகராட்சி துறை மற்றும் போலீசார் ஆகியோர் கோவில் வளாகத்தில் உள்ள தேரை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தேரின் உயரம் அகலம் குறித்து அளவு குறித்தும் பெரியகடை வீதி ஷராப் பஜார் காந்தி ரோடு மார்க்கெட் வீதி உள்ளிட்ட சாலைகளில் அளவுகளை சரிபார்த்து தேர் வருவதற்கான வழிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தாசில்தார் பெருமாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி கோவில் ஆய்வாளர் நடராஜன் நிர்வாக செயலாளர் சிவாஜி வருவாய் ஆய்வாளர் வேலுமணி வி.ஏ.ஒ இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News