உள்ளூர் செய்திகள்
கார்த்திகை தீப விழாவின் 3-வது நாளையொட்டி நேற்று இரவு சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் மாட வீதியில் உலா வந்த காட்சி.
நாக வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா
- இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது
- திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் இன்று 4-வது நாளான இன்று காலை நாக வாகனத்தில் அண்ணாமலையார் மாடவீதியில் உலா வந்தார்.
இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.
நேற்று 3-ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.