உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி பணியாளர் தற்கொலை

Published On 2023-04-06 15:05 IST   |   Update On 2023-04-06 15:05:00 IST
  • விஷம் குடித்து மயங்கி கிடந்தார்
  • போலீசார் விசாரணை

வாணாபுரம்:

வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் பகுதியைச்சேர்ந்த வர் கோவிந்தன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 47).

இவர் அங்கன்வாடி பணியாளராக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிஜோதி மணி இறந்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News