உள்ளூர் செய்திகள்

அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

Published On 2023-01-10 14:03 IST   |   Update On 2023-01-10 14:03:00 IST
  • 1200 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செய்யாறு:

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெம்பாக்கம் மேற்கு, கிழக்கு, மத்திய, ஒன்றிய திமுக சார்பில் பெருங்கட்டூர் கிராமம், கலைஞர் திடலில் பொதுக் கூட்டம் மற்றும் நல திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குஒ. ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜு, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் 1200 அன்னக்கூடைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏஅன்பழகன், லோகநாதன், ஆர். வெங்கடேஷ் பாபு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், ஞானவேல், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அசோக், ஆர்.வி. பாஸ்கரன், சான்பாஷா, சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் குப்புராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News