உள்ளூர் செய்திகள்
- வந்தவாசி பஜார் வீதி வழியாக சென்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ஆர்.கார்வண்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் தொடங்கிய ஊர்வலம் தேரடி, காந்தி சாலை, பஜார்வீதி வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஊர்வலத்தில் சங்கச் செயலர் கே.குணசேகர், பொருளாளர் எம்.டோமினிக் சேவியோ, பயிற்றுநர் எஸ்.நித்தியானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.