உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2023-04-28 13:18 IST   |   Update On 2023-04-28 13:18:00 IST
  • வண்ணாங்குளம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் உள்ள வண்ணாங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை நேற்று ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், பொதுமக்கள் வசதிக்காக திறந்து வைத்தார்.

மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் திருமால் வரவேற்று பேசினார்.

மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், ஆரணி நகர கழக செயலாளர் அசோக் குமார், ஒன்றிய செயலாளர் வக்கீல் சங்கர், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, கண்ணமங்கலம் நகர கழக செயலாளர் பாண்டியன், அரையாளம் வேலு, மாவட்ட ஐடி விங் செயலாளர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சரவண பாபு, மாவட்ட கலைப்பிரிவு பொருளாளர் குமார், மேல்நகர் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னா அன்பழகன், ஒன்றிய விவசாய பிரிவு சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வண்ணாங்குளம் கருணாகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News