உள்ளூர் செய்திகள்

சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

Published On 2023-03-03 15:07 IST   |   Update On 2023-03-03 15:07:00 IST
  • பாம்பு குறுக்கே வந்ததால் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி காவேரி (வயது 48), விவசாயக் கூலி தொழிலாளி.

இவர் கடந்த 25-ந் தேதி பகல் 12 மணி அளவில் அதே கிராமத்தில் வயல்வெளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு குறுக்கே வந்ததால் அலறி அடித்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மோரணம் போலீசில் புகார் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News