திருவண்ணாமலையில் பாரம்பரிய குதிரை சந்தை தொடங்கியது
- கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது
- ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திரு விழாவின் முக்கிய அம்ச மாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பர வல் காரணமாக தீபத்திரு விழாவில் குதிரை சந்தை நடைபெறவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்து டன் குதிரை சந்தை நேற்று தொடங்கியது.
அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி சந்தைத் திடலில், குதிரை சந்தை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற் பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள் ளன. அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால் நடை சந்தைக்கு பல்வேறு வகையான மாடுகள் விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டுள்ளன.
அதேபோல், குதிரை சந்தை அமைந் துள்ள பகுதிகளில் விதவிதமான ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை யிட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த குதிரை வண்டிக ளின் பயன்பாடு பெரும் பாலும் குறைந்துவிட்டது.ஆனாலும், திருவண்ணா மலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குதிரை சந்தை மற்றும் கால்நடை சந்தையில், சிறப்பு கால் நடை மருத்து முகாம் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு கொண்டுவ ரும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோ திக்கப்படுகிறது.