உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 6 பேர் கைது

Published On 2022-09-14 09:39 GMT   |   Update On 2022-09-14 09:39 GMT
  • போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியின் போது சிக்கினர்
  • மாட்டு வண்டிகள் பறிமுதல்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் அருகே செய்யாறு- கடுகுனுர் செய்யாற்று படுகையில் மணல் கடத்துவதாக செய்யாறு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் தனிப்படை போலீசார் செய்யாறு- கடுகனூர் செய்யாற்றப்படுகையில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெள்ளரிபேட்டை புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (42), அசோகன் (33), இளஞ்செழியன் (23), பழனி (53), சதீஷ்குமார் (30), ராஜேந்திரன் (53), ஆகிய 6 பேர்மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.அவர்களை மடக்கி பிடித்து. தனிப்படை போலீசார் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் மீது பெரணமல்லூர், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News