உள்ளூர் செய்திகள்
50,000 நெல் மூட்டைகள் ெரயில் மூலம் போளூர் வந்தது
- தஞ்சாவூரிலிருந்து கொண்டுவரப்பட்டது
- 87 லாரிகள் மூலம் ஏற்றி அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ெரயில் நிலையத்துக்கு டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் போளூர் வந்தடைந்தன.
சரக்கு ெரயில் மூலம் சுமார் 1500 டன் நெல் மூட்டைகள் 40 பெட்டிகளில் போளூர்வந்தது.
நெல் மூட்டைகளை 87 லாரிகள் மூலம் ஏற்றி அரிசி ஆலைகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.