உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

Published On 2022-10-22 09:35 GMT   |   Update On 2022-10-22 09:35 GMT
  • 2 கிலோ பறிமுதல்
  • சேலம் மத்திய சிறையில் அடைப்பு

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கோட் டீஸ்வரன் மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வட்ராபுத்தூர் சூர்யா (வயது 22), கீக்களூர் புரவடை வினோத் (23), மங்கலம் அஜித்குமார் (19), சந்துரு (21) ஆகிய 4 பேர் கஞ்சா விற்றதாக தெரிகிறது. அவர்களிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2/4கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News