உள்ளூர் செய்திகள்

தூய்மை பணிக்காக 31 மின்கலன் வாகனம்

Published On 2023-03-19 08:51 GMT   |   Update On 2023-03-19 08:51 GMT
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

செய்யாறு:

செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் கிராம தூய்மை பணிக்காக மின்கலன் வண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அைழப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரூ.76.80 லட்சம் மதிப்பில் 29 ஊராட்சிகளுக்கு 31 மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் ஞானவேல் ஜே கே சீனிவாசன், தொண்டரணி செயலாளர் ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News