உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்த 3 பேர் கைது
- போக்சோவில் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
கலசபாக்கம்:
கலசபாக்கத்தை அடுத்த வீரளூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். ஒருவர், பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று கல்லூரி மாணவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் பள்ளி மாணவியிடம் சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளனர். மேலும் மாண வியை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடலாடி போலீ சில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, 3 பேரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.