உள்ளூர் செய்திகள்

பைக்குகளை திருடிய 2 பேர் கைது

Published On 2022-07-20 14:39 IST   |   Update On 2022-07-20 14:39:00 IST
  • 7 வாகனங்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

போளூர்:

போளூர் அருகே வெண்மணி புறவழிச் சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபி ரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 பேரை சந்தேகத்தின் ேபரில் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்தனர்.

தொடர்ந்து விசாரணையில் அத்திமூர் பகுதியை சேர்ந்த முருகன் (எ) வாயாடி முருகன் (வயது 51) வீர கோயில் தெரு அத்திமுறை பகுதியை சேர்ந்த ரோகித் என தெரியவந்தது.

ஆகிய இருவருமே வாகன திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் இதுவரை சுமார் 7 பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்துனர்.

மேலும் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News