உள்ளூர் செய்திகள்

சாராய வியாபாரிகள் 2 பேர் கைது

Published On 2023-04-30 12:20 IST   |   Update On 2023-04-30 12:20:00 IST
  • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
  • ஜெயிலில் அடைத்தனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா களஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 32), கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (39) இருவரும் சாராய விற்பனை செய்து வந்தனர்.

செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் தொடர்ந்து சட்டவிரேத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டர் முருகேஷிற்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மோகன்தாஸ், ஏழுமலை ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News