உள்ளூர் செய்திகள்

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் சாவு

Published On 2023-01-16 10:00 GMT   |   Update On 2023-01-16 10:00 GMT
  • விபத்து ஏற்படுத்தி நிற்காமல் தப்பி சென்ற காரை பிடிக்க தீவிரம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.இவரது மகன் கோகுல் (வயது 25).இன்னும் திருமணம் ஆகவில்லை. போளூர் அடுத்த வெள்ளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (23).

நேற்று 2 பேரும் தங்களது பைக்கில் வேலூர் -திருவண்ணாமலை சாலை, காந்திநகர் ஏரிக்கரை மீது வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் அடுத்தடுத்து 2 பைக்குகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல், வெங்கடேசன் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News