உள்ளூர் செய்திகள்

பா.ம.க.வினர் 1100 மரக்கன்றுகள் வழங்கினர்

Published On 2022-10-10 15:16 IST   |   Update On 2022-10-10 15:16:00 IST
  • கீழ்பென்னாத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் 54 -வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் நகரம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் ஆர்.ஏ. கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், வன்னியர் சங்க துணை செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் குணசேகர், கணபதி, மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஆர்.முருகன் வரவேற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பக்தா என்கின்ற பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பழம், காய் என பல்வேறுவகையான 1100 -மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் ராஜீவ்காந்தி, மகளிர் அணி சங்க தலைவர் ஜெயந்தி முருகன், கீழ்பென்னாத்தூர் நகரதலைவர் தேசிங்கு, கிளைச்செயலாளர்கள் தங்கதுரை, காந்தி, சத்ரியன், அசோக்கு.மார், நகர அமைப்பு செயலாளர் தமிழ்மணி, ஊடகப் பேரவை செயலாளர்கள் மணிரத்தினம், ஜெயக்குமார், க.சா. முருகன் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்கள். நகர தலைவர் தேசிங்கு நன்றி கூறினார்.

Tags:    

Similar News