என் மலர்
நீங்கள் தேடியது "Distribution of saplings"
- நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது
- மாணவர்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக நடிகர் விவேக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு 610-மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு இந்தியன் ரெட்கிராஸ் துணை தலைவர் ஜெ.லட்சுமணன் ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி பள்ளி தாளாளர் பாலாஜி மற்றும் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் உடன் பள்ளி மாணவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- கீழ்பென்னாத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் 54 -வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் நகரம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் ஆர்.ஏ. கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், வன்னியர் சங்க துணை செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் குணசேகர், கணபதி, மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஆர்.முருகன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பக்தா என்கின்ற பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பழம், காய் என பல்வேறுவகையான 1100 -மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் ராஜீவ்காந்தி, மகளிர் அணி சங்க தலைவர் ஜெயந்தி முருகன், கீழ்பென்னாத்தூர் நகரதலைவர் தேசிங்கு, கிளைச்செயலாளர்கள் தங்கதுரை, காந்தி, சத்ரியன், அசோக்கு.மார், நகர அமைப்பு செயலாளர் தமிழ்மணி, ஊடகப் பேரவை செயலாளர்கள் மணிரத்தினம், ஜெயக்குமார், க.சா. முருகன் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்கள். நகர தலைவர் தேசிங்கு நன்றி கூறினார்.






