உள்ளூர் செய்திகள்

டெய்லர் கொலையில் 10 பேரிடம் விசாரணை

Published On 2023-01-09 14:21 IST   |   Update On 2023-01-09 14:21:00 IST
  • தனிப்படை தீவிரம்
  • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு துப்பு துலக்கினர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தையல் கடை நடத்தி வந்தார்.

தாமரை நகரில் ேநற்று முன்தினம் இரவு சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வெட்டி கொைல செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டராம்பட்டு சாலை வழியாக சென்றது தெரியவந்தது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகினறனர்.

Tags:    

Similar News