உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காங்கேயம் அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2022-12-29 13:02 IST   |   Update On 2022-12-29 13:02:00 IST
  • நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காங்கேயம் நத்தைக்கடையூர் அருகேயுள்ள நாட்டார்பளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

காங்கேயம்:

ஈரோடு மாவட்டம் வடபழனியை சேர்ந்த முருகேசன் மகன் கவுதம் (வயது22). இவர் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காங்கேயம் நத்தைக்கடையூர் அருகேயுள்ள நாட்டார்பளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது காங்கேயத்தில் இருந்து சென்ற அரசு பஸ் மோதியது. இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News