உள்ளூர் செய்திகள்
வார இறுதி நாட்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்
- கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) நிறுவனத்தின் திருப்பூர்மண்டலம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) நிறுவனத்தின் திருப்பூர்மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.