திருப்பூர் மாநகரில் ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி
- மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
- காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றகூடிய அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களு க்குமாநகரகாவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் யோகா பயிற்சி அளிக்க ப்பட்டது.
இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பணியாற்ற கூடிய காவ லர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட னர்.