உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் நாளை 13-ந் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பில்லூா், அத்திக்கடவு, வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளதால் ஒரு நாள் மட்டும் பல்லடம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.