உள்ளூர் செய்திகள்

கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்ற காட்சி.

வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி

Published On 2023-05-16 10:30 GMT   |   Update On 2023-05-16 10:30 GMT
  • முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.
  • பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காங்கேயம் :

காங்கேயம் அருகே உள்ள பாப்புரெட்டிப்பாளையம் பழனி ஆண்டவர் அக்கினி நட்சத்திர பரம்பரை தீர்த்தக் காவடி குழுவினர் சார்பில் வருடாந்திர அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 750 பேர் கொடுமுடி காவேரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து பழனிக்கு சென்று முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமிக்கு தீர்த்த அபிஷேகமும், ஆராதனையும் நடத்தி வழிப்பட்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக பொத்திபாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் பழனி ஆண்டவர் கோவிலில் கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் வேலன் தங்கவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News