உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

வடுகபாளையத்தில் ராஜகணபதி கோவில் புனரமைக்கப்பட்டு மகாயாக பூஜை நடைபெற்றது

Published On 2023-03-11 15:31 IST   |   Update On 2023-03-11 15:31:00 IST
  • ராஜ கணபதிக்கு சந்தனம், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
  • சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பல்லடம் :

பல்லடம் வடுகபாளை யம் டி.எம்.எஸ். நகரில் ராஜ கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு, மகாயாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜ கணபதிக்கு சந்தனம், பால், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News