உள்ளூர் செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட தம்பதியால் பரபரப்பு காட்சி. 

உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியால் பரபரப்பு

Published On 2023-08-12 10:58 GMT   |   Update On 2023-08-12 10:58 GMT
  • அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
  • போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

உடுமலை:

உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த உடுமலை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அலுவலகப்பணிக்கு இடையூறு செய்ததுடன் கூச்சல் போட்டு ரகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலை போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த போலீசார் அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து சார்பதிவாளர் கணேசன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார்.அதன் பேரில் மனுஏற்பு ரசீது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த சம்பவத்தால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டதுடன் கச்சேரி வீதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News