உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்வு

Published On 2023-07-30 05:00 GMT   |   Update On 2023-07-30 05:00 GMT
  • உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
  • தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 உடுமலை, ஜூலை.30-

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறைச் செயலர் பதவிக்கான போட்டியும், இளநிலை 2- ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறை இணைச் செயலர் பதவிக்கான போட்டியும் நடைபெற்றது. துறைச் செயலருக்கான தேர்தலில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தங்களுக்கான செயலரை தேர்ந்து எடுத்தனர்.

துறையின் இணைச் செயலருக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தேர்ந்து எடுத்தனர். பிற்பகலில் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலருக்கான போட்டி நடைபெற்றது.

இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக, துறைவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைச்செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்து எடுத்தனர்.இளநிலை 2-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாகத் துறைவாரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இணைச் செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான செயலர் மற்றும் மகளிர் செயலரை தேர்ந்து எடுத்தனர்.

அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக ஆ.யுவராஜ், துணைத்தலைவராக சை.முகமது ஜூனைத் ரஸ்வி, செயலாளராக சி.கோகுல்நாத், மகளிர் செயலராக தீபிகா தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர் பேரவைக்கான தேர்தலில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ச.பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News