உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக திருப்பூரில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Published On 2023-07-13 12:04 IST   |   Update On 2023-07-13 12:04:00 IST
விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சி ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருப்பூர்:

தமிழகம் முழுவதும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்ப ட்டுள்ளது. முதற்கட்டமாக இதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த 1000 ரூபாய் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களின் நிபந்தனைகளும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பத்தை பெறுகிற அரசு அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.

இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 330 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டம் தொடர்பாக முழு தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News