உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா நடைபெற்ற காட்சி.

பல்லடம் அருகே முத்தமிழ் வனத்தில் முப்பெரும் விழா

Published On 2023-02-07 14:06 IST   |   Update On 2023-02-07 14:06:00 IST
  • மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, பெயர் பலகை திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
  • நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி காரணம் பேட்டையில் முத்தமிழ் வனம் அமைந்துள்ளது. இதன் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, முத்தமிழ் வனம் பெயர் பலகை திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி பணிகள் குழு தலைவர் சோமு என்கிற பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கூப்பிடு விநாயகர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சின்னச்சாமி, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், கல்குவாரி உரிமையாளர்கள் சிவக்குமார், ராமகிரு ஷ்ணன், மகிழ்வனம் நிர்வாகிகள் விசை.

பூபதி,உதயகுமார், கோடாங்கிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், முத்தமிழ் மன்ற தலைவர் ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News