10-ம்வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சிறுமி மாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்
- போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த அவிநாசி, பச்சம்பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வந்தது. அதில் அந்த மாணவி தேர்ச்சியும் பெற்றார்.
இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் சிறுமியை எங்கும் காணவில்லை. பின்னர் இது குறித்து அவிநாசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார் .இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் தான் மாணவி வீட்டை விட்டு வெளியேறி சென்று இருப்பது தெரியவந்தது .போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார். அவரை கண்டவர்கள் 94981 01328 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.