உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அவினாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

Published On 2023-09-08 15:55 IST   |   Update On 2023-09-08 15:55:00 IST
  • சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர்.
  • அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவினாசி:

அவினாசி அருகேயுள்ள சின்னேரிப்பாளையத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது37). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இன்று அதிகாலை சின்னேரிப்பாளையம் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அழகேசன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News