உள்ளூர் செய்திகள்

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்த காட்சி. 

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Published On 2023-09-22 10:15 GMT   |   Update On 2023-09-22 10:15 GMT
  • வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார்,இணைந்தார்.
  • அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தனர்.

திருப்பூர்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் இன்று வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரைட் முத்துக்குமார், தி.மு.க., ஐ.டி., விங் வாலிபாளையம் பகுதி துணை செயலாளர் அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் நல்லூர் பகுதி செயலாளர் வி.பி.என். குமார், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதரன், சுரேஷ், ரமேஷ் குமார் மற்றும் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News