உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகமாக டாக்டர், செவிலியர்கள் நியமனம்

Published On 2022-08-09 05:16 GMT   |   Update On 2022-08-09 05:16 GMT
  • மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
  • விண்ணப்பங்களை 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் டி.எஸ்.கே., நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். நேர்முக தேர்வு 25 ம் தேதி நடக்குமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள, தற்காலிக நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பதிவு தபால் மூலமாக கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு, 20ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News