உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தாலுகா அளவிலான ரேசன் குறைகேட்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது

Published On 2023-03-10 08:00 GMT   |   Update On 2023-03-10 08:00 GMT
  • காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
  • பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம், நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு, மைவாடி நரசிங்காபுரம், உடுமலையில் தொட்டம்பட்டி, ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், குறைகேட்பு கூட்டம் நாளை, 11ம் தேதி நடைபெற உள்ளது.

காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன்கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News