உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்காவிட்டால் வேலைநிறுத்தம் - விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

Published On 2022-09-08 07:31 GMT   |   Update On 2022-09-08 07:31 GMT
  • யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம்.

திருப்பூர் :

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

8 ஆண்டுகளாக ஒப்பந்த படி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தினால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News