உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

Published On 2022-12-04 13:36 IST   |   Update On 2022-12-04 13:36:00 IST
  • வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
  • போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனாட்சி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News