காரணம்பேட்டையில் கல்குவாரி தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
- 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கம், திருப்பூர் மாநகராட்சி நடமாடும் தொழிலாளர்கள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்குவாரி தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
இதற்கு திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரணம்பேட்டை கல் குவாரி சங்க தலைவர் குணசேகர் முன்னிலை வகித்தார். செயலாளர் தேவராஜ் வரவறே்று பேசினார். கல்குவாரி தொழிலாளர்களுக்கு டாக்டர் அபிராமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் கல்குவாரி சங்க துணைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர், நடராஜ், மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.