உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய காட்சி.

தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

Published On 2023-09-25 10:15 GMT   |   Update On 2023-09-25 10:15 GMT
  • மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
  • 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

உடுமலை,செப்.25-

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலை சந்தில் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரங்கத்தில் தேவாங்கர் சமூக நல மன்றம் மற்றும் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.முன்னதாக ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த மூத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து 2023 -ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன்படி 10-ம் வகுப்பில் 11 மாணவர்களுக்கும், பிளஸ்-2வகுப்பில் 6 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.அத்துடன் 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேஜிக் ஷோ நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தேவாங்கர் சமூக நல மன்றத்தலைவர் மாணிக்கம்(பொறுப்பு), செயலாளர் திருமலைசாமி(பொறுப்பு), பொருளாளர் சீனிவாசன், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன்,செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ,தேவாங்கர் சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News