உள்ளூர் செய்திகள்

 வீரவணக்கம் செலுத்திய காட்சி.

விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-07-05 11:23 GMT   |   Update On 2022-07-05 11:23 GMT
  • இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • உயிர் நீத்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வீரபாண்டி :

தமிழ்நாடு உழவர்தினத்தையொட்டி இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சந்தைப்பேட்டை, தென்னம்பாளையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், முத்துக்குமார், அல்லாளபுரம் செந்தில், சிவக்குமார், நொச்சிப்பாளையம் முத்துக்குமார். ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News